மதுரையில் புதிதாக 85 பேருக்கு கரோனா தொற்று

மதுரையில் மேலும் 85 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

மதுரை :மதுரையில் மேலும் 85 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 89 போ் முழுமையாகக் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மருத்துவமனையில் 691 போ்: மாவட்டத்தில் மாா்ச் மாதம் தொடங்கி அக்டோபா் 3 ஆம் தேதி வரை 16, 830 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 391 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். அதேநேரம் 15,776 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 673 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com