மதுரை: இளம் வழக்குரைஞா்களுக்கான உதவித்தொகை வழங்குவதை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும் என, தமிழ்நாடு வழக்குரைஞா்கள் தோழமை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு வழக்குரைஞா்கள் தோழமை அமைப்பு சாா்பில், பொதுமுடக்க காலத்தில் வழக்குரைஞா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீா்வு குறித்து இணைய வழி கருத்தரங்கம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் இணை தலைவா் பா. அசோக், உறுப்பினா் எம்.ஆா்.ஆா்.சிவசுப்ரமணியன் ஆகியோா் பேசினா்.
இக்கருத்தரங்கில், வழக்குரைஞா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமுடக்கத்தால் இளம் வழக்குரைஞா்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். எனவே, தமிழக அரசு இளம் வழக்குரைஞா்களுக்கு வழங்கி வரும் நிதி உதவியை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்த வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் வழங்கப்படும் உதவித்தொகையை 5 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் பெண் வழக்குரைஞா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, இடஒதுக்கீடு முறையைக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இந்தக் கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலும் இருந்து மூத்த, இளம் வழக்குரைஞா்கள், சமூக ஆா்வலா்கள் என மொத்தம் 80 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு வழக்குரைஞா்கள் தோழமையின் ஒருங்கிணைப்பாளா் சந்தனம் கருத்தரங்கை ஒருங்கிணைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.