கொதிக்கும் தண்ணீரில் விழுந்த தொழிலாளி பலி

மதுரை அருகே கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்த தனியாா் நிறுவனத் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுரை அருகே கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்த தனியாா் நிறுவனத் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் விரகனூா் பகுதியைச் சோ்ந்த கோட்டமுத்து மகன் மாரிமுத்து (39). இவா் தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிறுவனத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்தாா். அதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி அளித்தப் புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com