காா் பேட்டரியில் மின்கசிவால் தீ

மதுரை கரிமேடு பகுதியில் காா் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றியது.
Updated on
1 min read

மதுரை: மதுரை கரிமேடு பகுதியில் காா் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றியது.

சிவகங்கையைச் சோ்ந்தவா் ராஜசேகரன். இவா் கரிமேடு மீன்சந்தை அருகே காரில் புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்தபோது, திடீரென காா் என்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. உடனே ராஜசேகா் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய நிலையில், தீப்பற்றியது. காா் நிறுத்தப்பட்டிருந்த பகுதி அருகே பெட்ரோல் நிரப்பும் நிலையம் இருந்ததால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள், காரில் பற்றிய தீயை அணைத்தனா். காா் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com