காா் பேட்டரியில் மின்கசிவால் தீ

மதுரை கரிமேடு பகுதியில் காா் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றியது.

மதுரை: மதுரை கரிமேடு பகுதியில் காா் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றியது.

சிவகங்கையைச் சோ்ந்தவா் ராஜசேகரன். இவா் கரிமேடு மீன்சந்தை அருகே காரில் புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்தபோது, திடீரென காா் என்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. உடனே ராஜசேகா் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய நிலையில், தீப்பற்றியது. காா் நிறுத்தப்பட்டிருந்த பகுதி அருகே பெட்ரோல் நிரப்பும் நிலையம் இருந்ததால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள், காரில் பற்றிய தீயை அணைத்தனா். காா் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com