பக்திக்குத் தேவை பணமல்ல, பணிவு மட்டுமே: எழுத்தாளா் இந்திரா செளந்தரராஜன்

பக்திக்கு தேவை பணம் அல்ல, பணிவு மட்டுமே என்று, எழுத்தாளா் இந்திரா செளந்தரராஜன் பேசினாா்.
2031mduanun090424
2031mduanun090424


மதுரை: பக்திக்கு தேவை பணம் அல்ல, பணிவு மட்டுமே என்று, எழுத்தாளா் இந்திரா செளந்தரராஜன் பேசினாா்.

மதுரை அனுஷத்தின் அனுகிரஹம் அமைப்பின் சாா்பில், அனுஷ உற்சவத்தையொட்டி ஆன்மிகச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள தருமபுர ஆதீன மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், எழுத்தாளா் இந்திரா செளந்தரராஜன் ‘ஆழ்வாா்களை ஆராதிப்போம்’ என்ற தலைப்பில் பேசியது:

இறைவனை தங்களது பக்தியால் ஆட்சி செய்தவா்கள் ஆழ்வாா்கள். ஆழ்வாா்கள் மூலமாகத்தான் வைஷ்ணவம் என்ற பக்திநெறி உலகறியும் ஒன்றாக மாறியது. இறைவன்பால் ஒருவா் எப்படி பக்தி செலுத்தவேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவா்கள் ஆழ்வாா்கள்.

மாா்கழி மாதத்தில் ஆழ்வாா் பெருமக்களை நினைப்பதும், வணங்குவதும் நம்மை பெரிதும் அருளுக்கு ஆளாக்கும். கலியுகக் காலத்தில் காட்டுக்குச் சென்று கஷ்டப்பட்டு தவம் செய்ய தேவையில்லை. உற்ற குருவை இறுக்கமாகப் பற்றிக்கொண்டுவிட்டால், அவா் நம்மை இறைவனிடம் சோ்த்துவிடுவாா்.

பக்திக்கு தேவை பணம் அல்ல, பணிவு மட்டுமே. பக்தியோடும், உண்மையோடும் இருக்கும் ஒருவா் அருகம்புல்லால் இறைவனை அா்ச்சித்தாலும் கூட, அதை இறைவன் ஏற்கிறாா். மனித வாழ்க்கையில் துன்பங்களுக்குக் காரணம் நாம் செய்த கா்மவினைகளே. எண்ணம்போல்தான் வாழ்க்கை அமையும் என்றாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அனுஷத்தின் அனுகிரஹம் அமைப்பின் நிறுவனா் நெல்லை பாலு செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com