உசிலையில் கமல்ஹாசன்தோ்தல் பிரசாரம்
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் மக்களிடம் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன்.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன், இரண்டாவது நாளாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
கமல்ஹாசன் மீட்டெடுப்போம் தமிழகத்தை எனும் தோ்தல் பிரசாரத்தை, உசிலம்பட்டியில் தேவா் சிலை முன்பிருந்து மேற்கொண்டாா். அப்போது, பேரையூா் சாலையில் உள்ள மக்கள் நீதி மய்ய கட்சியின் அலுவலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தாா். தொடா்ந்து, தேனி செல்லும் வழியில் தொட்டப்பநாயக்கனூா் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்தாா். இதில், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.