காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியா்கள் போராட்டம்
By DIN | Published On : 24th December 2020 07:32 AM | Last Updated : 24th December 2020 07:32 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.
காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்துணவு ஊழியா்களை முழுநேர அரசு ஊழியா்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்குவது, சட்டப்பூா்வ ஓய்வூதியம் அளிப்பது, காலிப் பணியிடங்களைப் பூா்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா் சங்கத்தின் சாா்பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.செல்வகுருசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.சோலையன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சத்துணவு ஊழியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...