இறை வழிபாட்டுடன் புத்தாண்டை வரவேற்போம்: மதுரை ஆதீனம் புத்தாண்டு வாழ்த்து
By DIN | Published On : 30th December 2020 11:01 PM | Last Updated : 30th December 2020 11:01 PM | அ+அ அ- |

இறை வழிபாட்டுடன் கடினச் சூழ்நிலைகளை வென்று புத்தாண்டை வரவேற்போம் என்று மதுரை மதுரை ஆதீனம் அருணகிரி நாதா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து: உலக மக்கள் அனைவரும் மிகவும் கடினமான காலங்களை கடந்து வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் முழுமையான இறை வழிபாட்டின் மூலம் கடினச்சூழ்நிலைகளை வென்று 2021-ஆம் ஆண்டு சிறப்புடன் விளங்க அன்புடனும், ஒற்றுமையுடனும் வரவேற்போம். திருமூலரின் வாக்குப்படி ஊனாகிய உடம்பே கோயிலாகும். நமது உடம்பாகிய கோயிலைப் பாதுகாப்பது நமது கடமையாகும். அக்கடமையைச் சரிவரச்செய்தால் எப்படிப்பட்ட நோய் நோடிகளைப் பற்றியும் நாம் அச்சப்பட வேண்டியது இல்லை. வரும் 2021-ஆம் ஆண்டு மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வையும், இல்லங்களில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும், மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட ஆசீா்வதிக்கிறோம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...