திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் துவரை கிலோ ரூ. 58-க்கு கொள்முதல்
By DIN | Published On : 05th February 2020 07:48 AM | Last Updated : 05th February 2020 07:48 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், வாடிப்பட்டி மற்றும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் துவரை கிலோ ரூ. 58-க்கு கொள்முதல் செய்யப்படும் என என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் துவரையை ரூ. 58-க்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. திருமங்கலம், வாடிப்பட்டி மற்றும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் துவரையை கிலோ ரூ. 58-க்கு விற்பனை செய்யலாம்.
துவரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் நிலத்திற்கான சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் கொள்முதல் நிலையங்களுக்குச் சென்று தற்போது முதலே பதிவு செய்து கொள்ளலாம். துவரையை விற்பனை செய்ய வரும்போது பதிவு செய்யப்பட்ட விவரங்களை விவசாயிகள் எடுத்து வரவேண்டும்.
விவசாயிகள் துவரையை நன்கு சுத்தம் செய்து உலரவைத்து விற்பனைக்கு கொண்டு வரவேண்டும். கொள்முதல் செய்யப்படும் துவரை ஈரப்பதம், இதர பொருள்கள் மற்றும் தானியங்கள் கலப்பு, சேதமடைந்த பயறு, சுருங்கிய பயறு, வண்டு தாக்கிய பயறு ஆகியவற்றை தரப்பரிசோதனை செய்து கொள்முதலுக்கு அனுப்பப்படும். கொள்முதல் செய்யப்பட்ட பயறுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். விவசாயிகள் கொள்முதல் குறித்து திருமங்கலம் 81100 54595, உசிலம்பட்டி 70102 80754, வாடிப்பட்டி 96008 02823 ஆகிய எண்களில் விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம். மேலும், வட்டார வேளாண்மை விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலா்களிடமும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும் தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம். மாா்ச் 14 ஆம் தேதி வரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதால் விவசாயிகள் விரைவாக செயல்பட்டு பயன்பெற வேண்டும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...