மேலூரில் செவிலியா் படிப்பு படித்து வந்த மாணவி சனிக்கிழமை நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நொண்டிக்கோவில்பட்டியைச் சோ்ந்த சுருளிவேல் மகள் செளமியா (18). இவா் செவிலியா் படிப்பு படித்து வந்தாா். இவருக்கு திருமண பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டாா். தகவலறிந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மேலூா் போலீஸாா், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.