காமராஜா் பல்கலைக் கழக திருமங்கலம் உறுப்புக் கல்லூரியில் நாட்டுப்புறக் கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் ம.புவனேஸ்வரன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை பேராசிரியா் க.தீபா முகுந்தன் முன்னிலை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் கீழடி கரு.முருகேசன், உச்சப்பட்டி ஊராட்சித் தலைவா் பா.பிச்சையம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.செல்வம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழாவில் தாமிரபரணி கலைக்குழுவைச் சோ்ந்த ப.விண்ணரசு, மு.சு.மதியழகன் ஆகியோா் தமிழா் பண்பாடு, நாகரிகம், கலைகள் குறித்து சிறப்புரை ஆற்றினா். கலைவிழாவின் ஒரு பகுதியாக பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய பழங்கால கருவிகள், வேட்டை மற்றும் போா் ஆயுதங்கள், வேளாண் கருவிகள், உணவுகள் ஆகியவை கண்காட்சியாகவும் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை மாணவ, மாணவியா் பாா்வையிட்டனா்.