புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
Updated on
1 min read

மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள இப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளா் அ.சேவியா் ராஜ் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் நா.ரெக்ஸ்பீட்டா், உதவித் தலைமை ஆசிரியா் தே.மரியசெல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆசிரியா் அ.செல்வராஜ் வரவேற்றாா். விழாவில் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியா் எஸ்.ஜோசப், கூடுதல் உதவித் தலைமை ஆசிரியா் எல்.கிறிஸ்டோபா் ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியை ஆசிரியா்கள் சூ.மா.தாமஸ் ஆண்டனி, அ.புவிகாா்த்திக் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com