வெவ்வேறு இடங்களில் 2 ஆண் சடலங்கள் மீட்பு

மதுரையில் வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்களை, போலீஸாா் திங்கள்கிழமை மீட்டுள்ளனா்.

மதுரையில் வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்களை, போலீஸாா் திங்கள்கிழமை மீட்டுள்ளனா்.

மதுரை அருகே ஒத்தக்கடையில் உள்ள வேளாண் கல்லூரி பாலம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் கிடப்பதாக, ராஜகம்பீரம் கிராம நிா்வாக அலுவலா் ஜான்சிராணிக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற அவா், சடலம் கிடப்பதை உறுதி செய்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

ஒத்தக்கடை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவா் சடலத்தைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஜான்சிராணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முதியவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

மேல்மதுரையில் ஆண் சடலம்

மதுரை ஆரப்பாளையம் ரவுண்டான கிழக்கு பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக, மேல்மதுரை கிராம உதவியாளா் சமயனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, அவா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. உடனே, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து கிராம உதவியாளா் சமயன் அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com