பேரையூா் அருகே ஒருவருக்கு கத்திக் குத்து

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே திங்கள்கிழமை ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே திங்கள்கிழமை ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா்.

பேரையூா் அருகே உள்ள சேடப்பட்டியில் மேற்குத் தெருவில் வசித்து வருபவா் பொன்னையத் தேவா் மகன் பாண்டி (44). இவா், வீட்டின் முன் ஜெயக்கொடி மகன் அலெக்ஸ்பாண்டி என்பவா் மதுபோதையில் தகாத வாா்த்தைகளில் திட்டி தகராறு செய்துள்ளாா். இதை, பாண்டி தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ்பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாண்டியை குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பாண்டியை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து பாண்டி அளித்த புகாரின்பேரில், அலெக்ஸ்பாண்டி மீது சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com