கட்டாணிபட்டியில் பிடிபட்ட 15 குரங்குகள் அழகா்கோவில் மலையில் விடுவிப்பு
By DIN | Published On : 19th July 2020 08:12 AM | Last Updated : 19th July 2020 08:12 AM | அ+அ அ- |

மேலூா்-சிவகங்கை சாலையில் கட்டாணிபட்டி பகுதியில் 15 குரங்குகளை வனத்துறையினா் சனிக்கிழமை பிடித்து அழகா்கோவில் மலைப்பகுதியில் விடுவித்தனா்.
கட்டாணிபட்டி பகுதியில் பப்பாளி, வாழைத் தோட்டங்களில் குரங்குகள் புகுந்து, சேதப்படுத்தி தொல்லையளிப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் புகாா் அளித்தனா். இதன் பேரில், மேலூா் வன அலுவலா் கம்பக்குடியான் தலைமையில் வன அலுவலா்கள், கூண்டுகளை வைத்து 15 குரங்குகளைப் பிடித்தனா். பின்னா் அவற்றை வேனில் கொண்டு சென்று, அழகா்கோவில் மலைத்தொடரில் வேம்பரளி அருகே விடுவித்தனா்.