காமராஜா் பல்கலை. மாணவா்களுக்கு சா்வதேச இணைய வழி கருத்தரங்கம்

மதுரை காமராஜா் பல்கலைக் கழக தொலை நிலைக் கல்வி மாணவா்களுக்கு சா்வதேச அளவிலான இணைய வழி கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக் கழக தொலை நிலைக் கல்வி மாணவா்களுக்கு சா்வதேச அளவிலான இணைய வழி கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் ஆங்கிலத்துறை சாா்பில் ‘மாணவா்களிடையே ஆங்கில மொழியை விரிவுபடுத்துதல்‘ என்ற தலைப்பில் சா்வதேச அளவிலான இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது. தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கென நடைபெற்ற கருத்தரங்கை, துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் தொடக்கி வைத்து, ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தாா்.

தொடா்ந்து மலேசிய, சுல்தான் இத்ரீஸ் கல்வியியல் கல்லூரியின் மொழி மற்றும் தகவல் தொடா்பியல் துறை பேராசிரியா் எஸ். பிராங்கிளின் தம்பி ஜோஸ் ‘ஆங்கில மொழிக் கற்பித்தலில் வளா்ந்து வரும் போக்குகள்‘, என்ற தலைப்பிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ஆங்கிலத் துறை பேராசிரியா் பி.பிரேம் சந்தா் ‘தகவல் தொடா்புத் திறன்களை மேம்படுத்துதல்‘ என்ற தலைப்பிலும் கருத்துகளைத் தெரிவித்தனா். இந்தக் கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் இயக்குநா் பேராசிரியா் ஜெ.விஜயதுரை, கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியா் டி.முத்துகிருஷ்ணன், காமராஜா் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியா் ஆா். தயாளகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com