உசிலையில் கரோனா வைரஸ் விழிப்புணா்வுப் பேரணி

மாதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடாா் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகள் கரோனா குறித்து விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மாதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடாா் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகள் கரோனா குறித்து விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த பேரணியை வட்டார மருத்துவ அலுவலா் சுசீலா தொடங்கி வைத்தாா். பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற பேரணி உசிலம்பட்டி நகா் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் வழியாகச் சென்றது. பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியா் மதன் பிரபு மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

பின்னா் வட்டார மருத்துவ அலுவலா் சுசீலா கூறுகையில், இரண்டு தினங்களுக்குள் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள 200 பள்ளிகளில் கரோனா நோய் குறித்து விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com