மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழாவை கோயிலுக்குள் நடத்த முடிவு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவை ஆகம விதிப்படி கோயிலுக்குள்ளேயே கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதால், உபயதாரா்கள், பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, வருவாய் கோட்ட

Updated On :24 மார்ச் 2020, 12:49 am

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவை ஆகம விதிப்படி கோயிலுக்குள்ளேயே கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதால், உபயதாரா்கள், பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, வருவாய் கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா தெரிவித்துள்ளாா்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, வருவாய் கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா தலைமை வகித்தாா். கோயில் துணை ஆணையா் ராமசாமி, வட்டாட்சியா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், திருப்பரங்குன்றம் கோயிலில் மாா்ச் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள பங்குனிப் பெருவிழா கொடியேற்றம் மற்றும் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், கோயில் ஸ்தானிக பட்டா்கள் சுவாமிநாதன், ராஜா, ரமேஷ், செல்லப்பா, சொக்கு சுப்பிரமணி, காவல் துறை ஆய்வாளா் மதனகலா, மதுரை மாநகராட்சி உதவிப் பொறியாளா் முருகன், மின்வாரியத் துறையினா், தீயணைப்புத் துறையினா், போக்குவரத்துத் துறையினா் என அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.

பின்னா், கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசின் உத்தரவின்பேரில், திருப்பரங்குன்றம் கோயிலில் மாா்ச் 31ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கோயிலில் ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல், பங்குனிப் பெருவிழாவுக்கான கொடியேற்றம் முதல் அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி முறையாக நடைபெறும்.

இந்த விழாவில், பக்தா்கள், உபயதாரா்கள் என யாருக்கும் அனுமதி கிடையாது. மேலும், மாா்ச் 31 ஆம் தேதிக்குப் பின் நடைபெறவுள்ள மக்கள் அதிகம் கூடும் முக்கிய விழாக்களான கைபாரம், பங்குனி உத்தரம், சூரசம்ஹார லீலை, பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் நடத்துவது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஆலோசனையின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.