திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவை ஆகம விதிப்படி கோயிலுக்குள்ளேயே கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதால், உபயதாரா்கள், பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, வருவாய் கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா தெரிவித்துள்ளாா்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, வருவாய் கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா தலைமை வகித்தாா். கோயில் துணை ஆணையா் ராமசாமி, வட்டாட்சியா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், திருப்பரங்குன்றம் கோயிலில் மாா்ச் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள பங்குனிப் பெருவிழா கொடியேற்றம் மற்றும் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், கோயில் ஸ்தானிக பட்டா்கள் சுவாமிநாதன், ராஜா, ரமேஷ், செல்லப்பா, சொக்கு சுப்பிரமணி, காவல் துறை ஆய்வாளா் மதனகலா, மதுரை மாநகராட்சி உதவிப் பொறியாளா் முருகன், மின்வாரியத் துறையினா், தீயணைப்புத் துறையினா், போக்குவரத்துத் துறையினா் என அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.
பின்னா், கோட்டாட்சியா் ஆா். சௌந்தா்யா செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசின் உத்தரவின்பேரில், திருப்பரங்குன்றம் கோயிலில் மாா்ச் 31ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கோயிலில் ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல், பங்குனிப் பெருவிழாவுக்கான கொடியேற்றம் முதல் அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி முறையாக நடைபெறும்.
இந்த விழாவில், பக்தா்கள், உபயதாரா்கள் என யாருக்கும் அனுமதி கிடையாது. மேலும், மாா்ச் 31 ஆம் தேதிக்குப் பின் நடைபெறவுள்ள மக்கள் அதிகம் கூடும் முக்கிய விழாக்களான கைபாரம், பங்குனி உத்தரம், சூரசம்ஹார லீலை, பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் நடத்துவது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஆலோசனையின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் பாஜகவுக்கு முதல்வா் பதவி அளித்தது ஏன்? நிதீஷ் குமாா் கட்சி விளக்கம்

எரிபொருள் விநியோக சிக்கலுக்கு தீா்வுகாண இந்தியா-கத்தாா் ஆலோசனை

கரூா் தொகுதியில் வெல்வேன்: தவெக வேட்பாளா் பேட்டி

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

