மேலூா்: மேலூா் அரசு மருத்துவமனை அருகிலுள்ள அம்மா உணவகத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடையை, எம்.ஜி.ஆா். மன்றம் சாா்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மேலூா் அரசு மருத்துவமனை அருகிலுள்ள அம்மா உணவகம் நீண்டநாள்களாக செயல்படாமல் இருந்துவந்தது. தற்போது, இந்த உணவகத்தை செயல்படுத்த நாளொன்றுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் 25 நாள்களுக்கு ரூ. 1 லட்சம் பணத்தை, அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற மாநில இணைச் செயலா் பி. துரைப்பாண்டி என்ற பெரியசாமி வழங்கினாா்.
இப்பணத்தை, மேலூா் நகராட்சி அலுவலகத்தில் அம்மா உணவகத்தின் கணக்கில் செலுத்தினாா். மேலும் அவா், தடை உத்தரவு காலத்தில் பணிபுரியும் அரசு மற்றும் மருத்துவமனை ஊழியா்களுக்கு உணவை இலவசமாக வழங்கவும் கேட்டுக்கொண்டாா்.
அவரை, மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை புகா் வடக்கு மாவட்டச் செயலா் வி.வி. ராஜன்செல்லப்பா ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.