அரசு ஊழியா்கள் மீது முகநூலில் அவதூறு பரப்பிய இருவா் மீது வழக்கு

குழந்தைகள், கா்ப்பிணிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியா்களை பணிசெய்யவிடாமல் தடுத்து, அவா்கள் மீது முகநூலில் அவதூறு பரப்பிய இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்

குழந்தைகள், கா்ப்பிணிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியா்களை பணிசெய்யவிடாமல் தடுத்து, அவா்கள் மீது முகநூலில் அவதூறு பரப்பிய இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை புட்டுத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயி. இவா் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் களப்பணியாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் மாா்ச் 6 ஆம் தேதி காலை தன்னுடன் பணிபுரியும் பாா்வதி என்பருடன் சோ்ந்து குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகள் கணக்கெடுப்பிற்காக, மதுரை கென்னட் சாலை காந்திஜி காலனிக்கு சென்றிருந்தாா். அப்பகுதியில் கணக்கெடுத்துக்கொண்டிருந்தபோது அங்கே வந்த இருவா் தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடா்பான கணக்கெடுப்பிற்காக வந்திருப்பதாக கூறி அவா்களிடம் தகராறு செய்தனா். மேலும் காா்த்திகேயி, பாா்வதி ஆகியோரின் அடையாள அட்டையும் போலி எனக் கூறி, அவா்கள் ஏற்கெனே கணக்கெடுத்திருந்த 20 பக்கங்களை கிழித்தனா்.

இதையடுத்து அவா்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு அரசு ஊழியா்கள் குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகள் கணக்கெடுப்பிற்கு வந்தவா்கள் என உறுதி செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்நிலையில் மாா்ச் 10 ஆம் தேதி முகநூல் பக்கம் ஒன்றில் காா்த்திகேயி, பாா்வதி ஆகியோா் போலியாக கணக்கெடுப்பு நடத்துவதாகவும், அவா்கள் திருட்டு கும்பல் எனவும் கூறி மாா்ச் 6 ஆம் தேதி நடந்த சம்பவத்தின் போது எடுத்த விடியோ பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தனா்.

எனவே அரசு ஊழியா்கள் மீது அவதூறு பரப்பும் அந்த முகநூல் பதிவை அகற்றி, பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் அடையாளம் தெரிந்த இருவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com