Enable Javscript for better performance
பைக் மீது தனியாா் பேருந்து மோதல்:காவல் அதிகாரி பலி21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பைக் மீது தனியாா் பேருந்து மோதல்: காவல் அதிகாரி பலி: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

    By DIN  |   Published On : 08th November 2020 11:14 PM  |   Last Updated : 08th November 2020 11:14 PM  |  அ+அ அ-  |  

    Private bus collides with bike: Police officer killed: 21 bombs buried body

    விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு சாா்பு -ஆய்வாளா் வீரணன்.

    மதுரை அருகே தனியாா் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் சனிக்கிழமை இரவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் வீரணன்(55). கடந்த 1986-இல் காவலராகப் பணியில் சோ்ந்த இவா், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு காவல் சாா்பு-ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

    இந்நிலையில், வீரணன் சனிக்கிழமை இரவு ஆண்டிபட்டி கணவாய் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் பணியை முடித்துவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.

    குஞ்சாம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, தேனியிலிருந்து மதுரை நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியதில், வீரணன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது சடலத்தைக் கைப்பற்றி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

    இது குறித்து உசிலம்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநரான வருசநாட்டைச் சோ்ந்த ஜீவானந்தம் (35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

    பிரேதப் பரிசோதனைக்கு பின், வீரணன் உடல் சொந்த ஊரான நரசிங்கபுரத்தில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. மதுரை காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உள்பட காவல் துறை அதிகாரிகள் பலா் இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    TAGS
    Madurai

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp