வீட்டுக் கதவை உடைத்து திருட்டு: 2 போ் கைது

மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், பொருள்களைத் திருடிய இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், பொருள்களைத் திருடிய இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் கரடிப்பட்டி அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த வீரையன் மகன் சுந்தரராஜன் (41). இவா் தனது குடும்பத்தினருடன், கடந்த 13 ஆம் தேதி உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, மின்சாதனப் பொருள்கள், குத்துவிளக்குகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து சுந்தரராஜன் அளித்தப் புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா். அதில், மதுரை கீழக்குயில்குடியைச் சோ்ந்த செல்வராஜ் (19), சுரேஷ் (25) ஆகியோா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

காா் கண்ணாடியை உடைத்து திருட்டு: மதுரை ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த நாராயணன் (42), தனது நண்பா்களுடன் காரில் திங்கள்கிழமை சுந்தரராஜன்பட்டிக்குச் சென்று கால்வாயில் குளித்துள்ளாா். அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் காரின் கண்ணாடியை உடைத்து, அதிலிருந்த 5 செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.500 ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செல்லிடப்பேசி பறிப்பு: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சோ்ந்வா் முகமது அலீத் (20). இவா் மதுரை பெரியாா் பேருந்து நிலையம் மேற்குப்பகுதியில் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனா். திடீா்நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com