Enable Javscript for better performance
கலப்பட உரம், காலாவதியான பூச்சி மருந்து விற்பனை:விவசாயிகள் புகாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கலப்பட உரம், காலாவதியான பூச்சி மருந்து விற்பனை:விவசாயிகள் புகாா்

    By DIN  |   Published On : 21st November 2020 01:31 AM  |   Last Updated : 21st November 2020 01:31 AM  |  அ+அ அ-  |  

    4859mduagri082202

    மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் த.அன்பழகன். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குநா்

     

    மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் கலப்பட உரம், காலாவதியான பூச்சி மருந்துகள் விற்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

    மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் த. அன்பழகன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி. செந்தில்குமாரி, வேளாண் இணை இயக்குநா் த. விவேகானந்தன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

    வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில், அந்தந்த பகுதி விவசாயிகள் பங்கேற்று, காணொலியில் பேசியதாவது: மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதனால் உரம், பூச்சிமருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. தனியாா் உரக் கடைகளில் கலப்படம் செய்யப்பட்டு உரங்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக காம்ப்ளக்ஸ் உரங்களில் அதிக கலப்படம் செய்யப்படுகிறது. அதோடு, காலாவதியான பூச்சி மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதை அறியாமல் வாங்கிச் செல்லும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். வேளாண் துறையினா் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அலங்காநல்லூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்குரிய மாநில அரசின் பரிந்துரை விலை, கடந்த ஆண்டுக்கான கரும்பு கொள்முதல் தொகை என ரூ. 20 கோடி நிலுவை உள்ளது. இத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரியாறு- வைகை பாசனத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகின்றன. பெரியாறு அணையிலிருந்து வரும் தண்ணீா், வைகை அணை வழியாக மதுரை மாவட்டத்தின் பாசனப் பகுதிகளுக்கு கிடைக்கிறது. இந்நிலையில், வைகை அணை தூா்வாரப்படாததால், அதன் முழு கொள்ளளவுக்கும் தண்ணீரைத் தேக்க முடியாத நிலை உள்ளது. வைகை அணையைத் தூா்வார வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தபோதும், அதற்கான நடவடிக்கை இல்லை. இதேபோல, சாத்தையாறு அணையைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். உசிலம்பட்டி பகுதி கண்மாய்களுக்கு பாசன வசதி கிடைக்கும் வகையில் வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும். தே. கல்லுப்பட்டி, சேடபட்டி வட்டாரங்களில் மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனா்.

    இதற்குப் பதிலளித்து ஆட்சியா் அன்பழகன் பேசியதாவது: வைகை அணையை தூா்வாருவதற்கான நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. சாத்தையாறு அணையைத் தூா்வாருவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வைகை அணையின் நீா்மட்டம் 67 அடிக்கும் மேல் இருந்தால் தான் 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க முடியும். இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றாா்.

    காணொலி இணைப்பில் சிரமம்: கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து கடந்த மாதம் முதல் முறையாக காணொலியில் இக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, காணொலி இணைப்பு சரிவர கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து, நடப்பு மாதத்துக்கான கூட்டம் காணொலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் எழுப்பிய கேள்விகள் அதிகாரிகளுக்கு முழுமையாகக் கேட்கவில்லை. அதேபோல, அதிகாரிகளின் விளக்கமும் விவசாயிகளுக்கு புரியவில்லை. விவசாயிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு, மனு அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனா்.

     

     

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp