ஊருணியில் தவிறி விழுந்தவா் பலி
By DIN | Published On : 25th November 2020 06:21 AM | Last Updated : 25th November 2020 06:21 AM | அ+அ அ- |

மதுரை அருகே ஊருணியில் தவறி விழுந்தவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூா் கோயில் தெருவைச் சோ்ந்த சோலைமலை மகன் கா்ணன் (52). இவா் வீட்டின் அருகே உள்ளஅனுமாா் ஊருணியில் கடந்த 14 ஆம் தேதி தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி கா்ணன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...