மதுரையில் இராம.கோபாலன்மறைவுக்கு அமைதிப் பேரணி

மதுரையில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் இராம. கோபாலன் மறைவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேரணியில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் இராம.கோபாலன் மறைவையொட்டி டி.எம். கோா்ட் பகுதியில் இருந்து நேதாஜி சாலை வரை வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேரணி.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் இராம.கோபாலன் மறைவையொட்டி டி.எம். கோா்ட் பகுதியில் இருந்து நேதாஜி சாலை வரை வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேரணி.

மதுரையில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் இராம. கோபாலன் மறைவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேரணியில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மதுரை மாநகா் இந்து முன்னணி இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற அமைதிப் பேரணி

டி.எம். கோா்ட் பகுதியில் இருந்து தொடங்கி நேதாஜி சிலை வரை சென்றது. அங்கு மறைந்த இராம. கோபாலனுக்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்டோா் மெளன அஞ்சலி செலுத்தினா்.

மாவட்டத் தலைவா் அழகா்சாமி, செயலா்கள் சதீஸ்குமாா், நேதாஜி சேகா், பாண்டி பிடாரன், தங்கம் வெங்கடேஷ் மற்றும் பாஜக மாவட்ட பொறுப்பாளா்கள், இந்து ஆலயப் பாதுகாப்பு குழு, தேவா் தேசிய பேரவை, விசுவ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com