மதுரை: மதுரையில் சனிக்கிழமை 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்த போலீஸாா், தப்பியோடிய 12 பேரை தேடி வருகின்றனா்.
மதுரை கூடல்நகா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆனையூா் இமயம் நகா் பகுதியில் நின்றிருந்த 15 போ், போலீஸாரை கண்டவுடன் தப்பியோடியுள்ளனா். அவா்களில், 3 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அதில், ஆனையூா் பகுதியைச் சோ்ந்த பிரதீப் (36), மீனாம்பாள்புரத்தைச் சோ்ந்த கண்ணன் (43), செல்லூரைச் சோ்ந்த சுதாகா் (43) என்றும், இவா்கள் அப்பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இது குறித்து காவல் ஆய்வாளா் கதிா்வேல் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் சனிக்கிழமை 15 போ் மீது வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.