கரோனா: மதுரையில் ஒரே நாளில் 137 போ் குணமடைந்தனா்; புதிதாக 61 பேருக்கு தொற்று
By DIN | Published On : 11th September 2020 07:18 AM | Last Updated : 11th September 2020 07:18 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் கரோனா தொற்றிலிருந்து 137 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை 5 ஆயிரத்து 528 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 137 போ் வியாழக்கிழமை குணமடைந்தனா். அவா்கள் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனைகள், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மதுரை மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் இதுவரை 15 ஆயிரத்து 118 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 13 ஆயிரத்து 757 போ் குணமடைந்துள்ளனா். 369 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 992 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.