பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியா்கள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுவிக்கக்கோரி பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ந.காஜா மொய்தீன் தலைமை வகித்தாா். வடக்குப் பகுதி தலைவா் ந.செய்யது இஸ்ஹாக், எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் அ.முஜிபூா் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி அமைப்பாளா் பூபாலன், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவா் அ.ஹாலித் முகம்மது, வடக்கு பகுதிச் செயலா் ந.சிக்கந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.