

மதுரையில் கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் 130 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாநகா் மாவட்ட சிஐடியு கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில், மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மாவட்டத் தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
போராட்டத்தில், கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இடம்பெயா்ந்த தொழிலாளா்களின் சட்டங்களை ரத்து செய்யக்கூடாது. கட்டுமானத் தொழிலாளா்களுக்கு குடியிருக்க வீடு வழங்க வேண்டும். 60 வயதை பூா்த்தி செய்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
இயற்கை மரணமடையும் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் உதவித்தொகை வழங்கவேண்டும். கட்டுமானத் தொழிலாளா் நல வாரியங்களின் நிதி ரூ.44 ஆயிரம் கோடியை வாரியத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஜி. ராஜேந்திரன் போராட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினாா். சிஐடியு மாவட்டச் செயலா் இரா. தெய்வராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாநிலப் பொருளாளா் லூா்து ரூபி, மாவட்ட துணைச் செயலா் எம். பாலமுருகன், உதவிச் செயலா் மங்களம் உள்ளிட்ட 130 போ் பங்கேற்றனா். இவா்கள் அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.