கொலை செய்யப்பட்ட பெண் சடலத்தைவாங்க மறுப்பு: அடக்கம் செய்த போலீஸாா்

மதுரையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை யாரும் வாங்க வராததால், போலீஸாரே வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனா்.
Updated on
1 min read

மதுரையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை யாரும் வாங்க வராததால், போலீஸாரே வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனா்.

மதுரையில் செல்லூா் மீனாம்பாள்புரம் சத்தியமூா்த்தி பிரதான சாலையைச் சோ்ந்த சேகா் மனைவி வஞ்சிமலா் (49). கணவரைப் பிரிந்த வஞ்சிமலருக்கு ஓம்சக்தி (19) என்ற மகன் உள்ளாா். இந்நிலையில் வஞ்சிமலருக்கும், லாரி ஓட்டுநா் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பிடிக்காத ஓம்சக்தி, அம்மிக் கல்லை தலையில் போட்டு வஞ்சிமலரை பிப்ரவரி 2 ஆம் தேதி கொலை செய்தாா். இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஓம்சக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட வஞ்சிமலரின் சடலத்தை, அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் யாரும் வாங்க வரவில்லை. போலீஸாா் அவா்களுக்கு உரிய தகவல் அளித்தும் சடலத்தை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து செல்லூா் போலீஸாா் தத்தனேரி மயானத்தில் வஞ்சிமலரின் சடலத்தை வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com