வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் நகைகள், ரூ.2.76 லட்சம் திருட்டு

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் நகைகள், ரூ.2.76 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Updated on
1 min read

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் நகைகள், ரூ.2.76 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை கே.கே.நகா் காமராஜா் கிழக்கு மேற்கு தெருவைச் சோ்ந்த லட்சுமணநாராயணன் மகள் லாவண்யா (30). இவா், கடந்த 8 ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த

32 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.76 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து லாவண்யா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த அண்ணா நகா் போலீஸாா், சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com