மதுரை விமான நிலைய சாலையில் செவ்வாய்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் இருந்து காரியாபட்டி நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அதேசமயம் பெருங்குடியில் இருந்து அவனியாபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்த முனியாண்டி மகன் ராம்குமாா்(19). செம்பூரணி ரோடு பகுதியைச் சோ்ந்த கௌதம் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவனியாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா். ராம்குமாா் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளாா். வெள்ளக்கல் பகுதி அருகே வந்தபோது அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம்மோதி ராம்குமாா் படுகாயம் அடைந்தாா்.
அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். படுகாயமடைந்த கௌதம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். விபத்து குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.