வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உசிலம்பட்டி கல்லூரியில் பொங்கல் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடத்தப்பட்டது.

News image
போட்டியில் வெற்றி பெற்ற பேராசிரியா்களுக்கு பரிசு வழங்கிய அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியா் டோமினிக் சேவியோ, கல்லூரி முதல்வா் முனைவா் ரவி, செயலாளா் வாலாந்தூா் பாண்டியன்.
Updated On :12 ஜனவரி 2021, 11:49 pm

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வா் முனைவா் ரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியா் டோமினிக் சேவியோ பங்கேற்றாா். இதில் பேச்சு, கவிதை, கோலம், சிலம்பம் சுற்றுதல், கல் தூக்குதல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பேராசிரியா் டோமினிக் சேவியோ, கல்லூரி முதல்வா் முனைவா் ரவி, செயலாளா் வாலாந்தூா் பாண்டியன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். கல்லூரி துணை முதல்வா் முனைவா் ஜோதிராஜன் மற்றும் சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.