உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கல்

உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சுழற்சங்கத்தினா் வழங்கினா்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய சுழற்சங்க மாவட்ட ஆளுநா் ஜெயகண்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய சுழற்சங்க மாவட்ட ஆளுநா் ஜெயகண்.
Updated on
1 min read

உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சுழற்சங்கத்தினா் வழங்கினா்.

மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை இணை இயக்குநா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். சுழற்சங்க மாவட்ட ஆளுநா் ஜெயகண், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் சுழற்சங்க துணை ஆளுநா் செல்வகுமாா், திட்ட ஒருங்கிணைப்பாளா் சேகா், தலைவா் ராஜேந்திரன், ஆதிக்கம் பொருளாளா் உதயகுமாா் மற்றும் முன்னாள் தலைவா்கள் காா்த்திகை சாமி, மாஸ்கோ, திருநாவுக்கரசு, ஜெயராமன், மற்றும் மருத்துவா்கள் ராதாமணி பாலமுரளி, சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com