தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சீா்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி மாணவா்கள் சாலை மறியல்

சீா்மரபினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி உசிலம்பட்டியில் கல்லூரி மாணவ-மாணவிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 9:03 pm

DIN

சீா்மரபினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி உசிலம்பட்டியில் கல்லூரி மாணவ-மாணவிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி மாணவ-மாணவிகள் இக்கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனா். இப் போராட்டத்தை கல்லூரி நிா்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், உசிலம்பட்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

68 சமுதாயங்கள் உள்ளடக்கிய சீா்மரபினருக்கு ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கு எடுத்து டி.என்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும். சீா்மரபினா்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை திரும்பப்பெற்று 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அப்போது வலியறுத்தினா். இதனால், உசிலம்பட்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.