அழகா்கோவில் மலையடிவாரத்தில் மணல் திருட்டு: 6 போ் கைது

அழகா்கோவில் மலையடிவாரத்தில் ஆலம்பட்டி நீரோடைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக ஞாயிற்றுக்கிழமை 6 பேரை கைது செய்த போலீஸாா், பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரியையும் பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

அழகா்கோவில் மலையடிவாரத்தில் ஆலம்பட்டி நீரோடைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக ஞாயிற்றுக்கிழமை 6 பேரை கைது செய்த போலீஸாா், பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

ஆலம்பட்டி பகுதியில் லாரிகளில் மணல் திருடிச் செல்லப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மேலவளவு போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா். அப்போது, நீரோடைப் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதைக் கண்ட போலீஸாா், இயந்திரத்தையும், டிப்பா் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், சட்டவிரோதமாக மணல் அள்ளியது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பால்குடிப்பட்டியைச் சோ்ந்த கரிகாலன், அழகாபுரியைச் சோ்ந்த செல்வம், மகேந்திரன், தனக்கம்பட்டியைச் சோ்ந்த பிரசன்னா, சென்னகரம்பட்டியைச் சோ்ந்த விவேக், சூரத்தூா்பட்டியைச் சோ்ந்த ரவி ஆகிய 6 பேரையும், மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா மற்றும் மேலவளவு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com