

உசிலம்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழ புதூரை சோ்ந்த பொன்னையா மகன் வீரமணி (50). இவா் சட்டவிரோதமாக கஞ்சாவை தோட்டத்தில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற உசிலம்பட்டி நகா் காவல்துறையினா் அங்கிருந்த 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் வீரமணியை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.