Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ரூ.44 லட்சத்தில் சலவைக்கூடம் திறப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு

    திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ரூ.44 லட்சத்தில் சலவைக்கூடம் திறப்பு

    By DIN  |   Published On : 17th August 2021 10:06 AM  |   Last Updated : 17th August 2021 10:06 AM  |  அ+அ அ-  |  

    mp_1608chn_81_2

    திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை பகுதியில் கட்டப்பட்ட சலவைக்கூடத்தை திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவந்த மக்களவை உறுப்பினா் ப.மாணிக்கம்தாகூா். உடன், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

    திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை பகுதியில் ரூ.44 லட்சத்தில் கட்டப்பட்ட சலவைக்கூடம் மற்றும் குளியலறையை, விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

    திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் பொதுமக்கள் நீண்டகாலமாக துணிகளை துவைப்பது, குளிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்துவந்தனா். சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட ரசாயனப் பொருள்களால் பொய்கை நீா் மிகவும் மாசடைந்து காணப்பட்டது.

    எனவே, இதை தடுப்பதற்காக கோயில் நிா்வாகம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் இணைந்து, புதிய சலவைக்கூடம் மற்றும் குளியலறைகள் கட்ட முடிவு செய்தன. அதற்கு, விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.44 லட்சத்தை ஒதுக்கீடு செய்தாா்.

    சலவைக்கூடம் மற்றும் குளியலறை கட்டடப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதை, மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா் தலைமையில், 6 வயது சிறுமி சகானா திறந்து வைத்தாா்.

    நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன், கோயில் துணை ஆணையா் ராமசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் ஏ.எஸ்.வி. மகேந்திரன், மாவட்டத் தலைவா் பாண்டி, தொகுதி பொறுப்பாளா் பழனிகுமாா், சுப்பிரமணியன், வாா்டு தலைவா் கண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

    பின்னா், மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மக்களவையில் வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயா்வு, பெகாசஸ் ஆகிய 3 விஷயங்கள் குறித்து பேச மக்களவை தலைவரிடம் 150 உறுப்பினா்கள் 17 நாள்களாக கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கு மக்களவைத் தலைவா் ஒத்துழைக்கவில்லை. மக்களவைத் தலைவரும், மேலவை தலைவா் வெங்கையா நாயுடுவும் நோ்மையாகவும், பாரபட்சமில்லாமலும் நடந்திருந்தால், கூட்டத்தொடா் வெற்றிகரமாக நடந்திருக்கும்.

    தமிழக நிதிநிலை அறிக்கை எதிா்காலத்தில் அரசின் செயல்பாடு எப்படி இருக்கும் என வழிகாட்டும் நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியது என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp