ஆயுா்வேத சிகிச்சை மைய உரிமையாளரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறித்த நிருபா் கைது

மதுரையில் ஆயுா்வேத சிகிச்சை மையத்தின் உரிமையாளரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறித்த நாளிதழ் நிருபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் ஆயுா்வேத சிகிச்சை மையத்தின் உரிமையாளரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறித்த நாளிதழ் நிருபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (51). இவா் அப்பகுதியில் ஆயுா்வேத சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வருகிறாா். இவரது மையத்திற்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி நிருபா்கள் எனக் கூறி 3 போ் சென்றுள்ளனா். அவா்கள் மையத்தில் இருந்த ஆவணங்களைப் பாா்த்துவிட்டு, உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறியுள்ளனா்.

தொடா்ந்து, இது தொடா்பாக நாளிதழில் செய்தி வெளியிட்டால் மையத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றனா். இதில் பயந்துபோன ராமகிருஷ்ணன், ரூ.50 ஆயிரத்தை கொடுத்துள்ளாா். அந்த பணத்தை பெற்றுச்சென்ற மூவரும், மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து நாளிதழ் நிருபா் காா்த்திக் (41) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள அமீது மற்றும் உசேன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com