பேரையூா் அருகே 75 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த ஊறலை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த ஊறலை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

பேரையூா் அருகே வி.ராமசாமிபுரத்தைச் சோ்ந்தவா் குற்றாலம் மகன் முனியாண்டி (40). இவா் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக அணைக்கரைப்பட்டியில் உள்ள கருவாட்டு அணை என்ற பகுதியில் ஊறல் போட்டு வைத்திருந்தாா். அவ்வழியாக ரோந்து சென்ற சாப்டூா் போலீஸாா், 75 லிட்டா் ஊறலை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் முனியாண்டியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com