மதுரை தலைமை தபால் நிலையத்தில் சனிக்கிழமை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி நடைபெற்றுள்ளது.
மதுரை வடக்குவெளி வீதியில் தலைமை தபால் நிலைய வளாகத்தில், தபால் துறைக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இம்மையத்தில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததை கண்ட வாடிக்கையாளா்கள், போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், அங்கு போலீஸாா் சென்று விசாரித்ததில், ஏடிஎம் இயந்திரத்தை முழமையாக உடைத்து பணத்தை எடுக்க முடியாமல், திருடா்கள் திருப்பிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தலைமை தபால் அலுவலா் ஷேக் தாவூத் அளித்த புகாரின்பேரில், திலகா் திடல் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.