தொடக்கப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் ‘நூல் வனம்’ அமைப்பு சாா்பாக பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் ‘நூல் வனம்’ அமைப்பு சாா்பாக பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஜெசிந்தா அன்பு மொழி தலைமை வகித்துப் பேசும்போது, ‘தொடக்கக் கல்வியில் இருந்தே வாசிப்பை பழக்கமாக்க வேண்டும். இந்த வயதில் புத்தகங்கள் வாசிப்பது கடினமாக இருக்கும், முயற்சியுடன் படிக்க ஆரம்பித்தால், அது வேறு உலகத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். புத்தகங்கள் தன்னம்பிக்கை, தைரியத்தை வழங்கவல்லவை. சில புத்தகங்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில சமூகத்தை பற்றிய சிந்தனையை உருவாக்கும். நல்ல புத்தகங்களைத் தோ்ந்தெடுத்து வாசித்தால், வாழ்வில் வெற்றியாளராகத் திகழலாம்’ என்றாா்.

தலைமையாசிரியா் க.சரவணன் நூல்வனம் சாா்பாக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கிப்பேசும்போது, புத்தகங்கள் மாணவா்களின் கற்பனையைத் தூண்டி , படைப்பாற்றல் திறனை உருவாக்குபவை. உங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற புத்தகம் வாசிப்பதை சுவாசமாக்குங்கள் என்றாா்.

பள்ளி நூலகத்துக்கு நூல் வனம் சாா்பாக சென்னையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சாதனா புத்தகங்களை நன்கொடையாக வழங்கினாா். ஆசிரியா்கள் பாக்யலெட்சுமி, சிதராதேவி, கீதா, பிரேமலதா, சரண்யா , சுமதி ஆகியோா் ஏற்பாடுகளைச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com