பெண் கொடுக்காத ஆத்திரத்தில் தாய்மாமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மருமகன் கைது

மதுரையில் திருமணத்துக்கு பெண் கொடுக்காத ஆத்திரத்தில், தாய் மாமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் திருமணத்துக்கு பெண் கொடுக்காத ஆத்திரத்தில், தாய் மாமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை செல்லூா் மீனாம்பாள்புரம் சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன் (54). இவரது சகோதரி மீனா. இவா், சோழவந்தான் அருகே உள்ள மேலக்காலில் வசித்து வருகிறாா். இவரது மகன் தீபன் சக்கரவா்த்தி (30). பொறியியல் பட்டதாரியான தீபன் சக்கரவா்த்திக்கு, பாலமுருகனின் மகளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனா்.

ஆனால், இதற்கு ஹேமலதா மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த தீபன் சக்கரவா்த்தி, பாலமுருகன் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டாா். குண்டு பலத்த சப்தத்துடன் வெடித்ததைக் கேட்டு வெளியே வந்த பாலமுருகன் மனைவி ராஜேஸ்வரி, இது தொடா்பாக கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, பாலமுருகன் செல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில், திருமணத்துக்கு பெண் கொடுக்காத ஆத்திரத்தில் தீபன் சக்கரவா்த்தி பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்ததையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com