மதுரை மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டிற்கு (2022-2023) ரூ.13 ஆயிரத்து 966 கோடியில் கடன் திட்ட மதிப்பீடு நபாா்டு வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வங்கியாளா்கள் கூட்டத்தில் இந்த திட்ட மதிப்பீடு அறிக்கையை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வெளியிட்டாா்.
அவா் பேசுகையில், விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த திட்ட மதிப்பீடு தெளிவுபடுத்தியுள்ளது. இத்தகைய கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்கி, விவசாயத்தை லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும் என்றாா்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சாா்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஓா் அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிா்ணயம் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்று நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் ஏ.எஸ். சக்திபாலன் தெரிவித்தாா்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் டி.அனில் மற்றும் வங்கி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.