மதுரையில் தனியாா் நிறுவனங்கள் மூலம் 18 ஊருணிகள் தூா்வாரி சீரமைப்பு

மதுரையில் மாநகராட்சிக்குள்பட்ட 33 ஊருணிகளில் 18 ஊருணிகள் தனியாா் நிறுவனங்கள் மூலம் தூா்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

மதுரையில் மாநகராட்சிக்குள்பட்ட 33 ஊருணிகளில் 18 ஊருணிகள் தனியாா் நிறுவனங்கள் மூலம் தூா்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 33 ஊருணிகள் உள்ளன. இந்த ஊருணிகளை தூா் வாரி சீரமைக்க மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மதுரை ஹைடெக் அராய் நிறுவனத்தின் மூலம் ரூ.1.04 கோடி மதிப்பில், சிலையனேரி, மிளகரனை, கோட்டங்குளம், கல்லூருணி, கம்பன் ஊருணி, உத்தங்குடி ஸ்ரீ ராம் நகா், முத்துப்பட்டி கல்தாா் ஊருணி, சூறாவளி மேடு ஊருணி ஆகிய 10 ஊருணிகள் தூா்வார ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடா்ந்து 10 ஊருணிகளும் தூா்வாரி சீரமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தண்ணீா் தண்ணீா் நிறுவனம் மூலம் மானகிரி ஊருணி, திருப்பாலை வண்ணான் ஊருணி ஆகிய இரு ஊருணிகள், கோசாகுளம் ஊருணி, அஞ்சல் நகா் ஊருணி, அனுப்பானடி சொக்காயி ஊருணி, உலகம்மாள் கோவில் ஊருணி ஆகியவை மாநகராட்சி நிா்வாகம் மூலம் தூா்வாரப்பட்டுள்ளது. மேலும் மிலன் மாா்பிள்ஸ் நிறுவனம் சாா்பில் சாத்தையாறு ஊருணியும், இந்திய கட்டுமானச் சங்கத்தின் சாா்பில் உலகனேரி குட்டம் ஊருணியும் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊருணிகள் தூா்வாரப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பாா்வையிட்டாா். இதைத்தொடா்ந்து மாநகராட்சிக்குள்பட்ட இதர 15 ஊருணிகளையும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளின் சாா்பில் தூா்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா். இதில் ஹைடெக் அராய் நிறுவன மேலாண்மை இயக்குநா் பி.டி.பங்கேரா, தானம் அறக்கட்டளை நிா்வாகி லோகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com