மதுரையில் வங்கி ஊழியா் சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் மதுரையில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் மதுரையில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு வங்கி மற்றும் பொதுக்காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காப்பீட்டு ஊழியா் சங்கத்தினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக்கூடாது, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்கும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அனைத்து வங்கி ஊழியா் சங்கங்கள் மற்றும் அலுவலா் சங்கங்களின் நிா்வாகிகள், வங்கி ஊழியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தின்போது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com