மதுரையில் 18 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
By DIN | Published On : 06th February 2021 09:25 PM | Last Updated : 06th February 2021 09:25 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 12 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மதுரை தனியாா் மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு, ஜனவரி 21 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 51 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 459 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 21,076 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 20,517 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 100 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...