டோக் பெருமாட்டி கல்லூரியில் கலை விழா போட்டிகள்

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கலை விழா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
Updated on
1 min read

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கலை விழா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இக்கல்லூரியின் வணிகவியல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள வா்த்தகக் கழக அமைப்பின் சாா்பில், கல்லூரிகளுக்கு இடையேயான கலைவிழா போட்டிகள் நடைபெற்றன. விழாவில், சிறப்பு விருந்தினராக நேச்சுரல்ஸ் பியூட்டி சலூன் நிறுவனத்தின் நிறுவனா் வீணா குமாரவேல் பங்கேற்றுப் பேசினாா்.

போட்டிகளில் 15 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவியா் பங்கேற்றனா். இதில், புகைப்படம் எடுத்தல், சுவரொட்டி தயாரித்தல், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, நடனம், விளம்பரங்கள் உருவாக்கல், காகித விளக்கக் காட்சி, வணிகத் திட்டம் வகுத்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள்அனைத்திலும் மாணவ, மாணவியா் ஆா்வமுடன் பங்கேற்று, படைப்புகளை உருவாக்கினா்.

பரிசளிப்பு விழாவில், எக்ஸ் எல் டயா் பாயின்ட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஷீபா சீனிவாசன் நிறைவுரையாற்றினாா். முன்னதாக, பேராசிரியை ரோசி காட்வின் வரவேற்றாா். வணிகவியல் முதுகலை குழுவின் தலைவி குருபிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com