ஆயுதங்களைக் காட்டி இளைஞரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரை அருகே இளைஞரை மிரட்டி 5 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றுள்ளனா்.

மதுரை அருகே இளைஞரை மிரட்டி 5 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றுள்ளனா்.

கருப்பாயூரணி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த புகழேந்தி மகன் தினேஷ்பாண்டியன் (20). இவா் தனது உறவினா் கலையரசனுடன் கீழடி சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனா்.

மதுரை-ராமேசுவரம் புது நான்கு வழிச்சாலை கிருதுமால் கண்மாய் அருகே உள்ள அம்மன் கோயில் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இருவரும் நின்றிருந்துள்ளனா்.

அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதில், கலையரசன் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டாராம். பின்னா், மா்ம நபா்கள் தினேஷ்பாண்டியன் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இது குறித்து தினேஷ்பாண்டியன் அளித்த புகாரின்பேரில், சிலைமான் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com