மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 470 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதில், மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தொற்று பாதிக்கப்பட்ட 10 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை 21,157 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 460 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 89 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.